இந்தியா தனது மிகப்பெரிய தொழிலாளர் பட்டாளத்தை முறைசார் தொழிலாளர்களாக மாற்றுவதில் தடுமாறுகிறது. இச்சூழல் முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்வதற்கு மட்டுமல்லாமல் தொழிலாளர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இதற்கு அதிக பரிவர்த்தனைகளை அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் செய்வது மட்டுமே – டிஜிட்டல் முறையில் சரக்கு மற்றும் சேவை வரி மேற்கொள்வது – தீர்வாக இருக்காது.
மிக சமீபத்தில் எடுக்கப்பட்ட காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி (Periodic Labor Force Survey) 74% விவசாயம் சாராத தொழிலாளர்கள் எல்லாம் Proprietorships மற்றும் Partnerships நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்கள் தான் முறைசாரா தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் வருகிறவர்கள். ஜூலை 2020 முதல் ஜூன் 2021 வரை, கோவிட் 19 தொற்று காலகட்டத்தில் இது 3% குறைந்திருந்தது. தற்போது மீண்டும் முன்னேற தொடங்கிய பொருளாதார நிலைமைகளில் தொழிலாளர்கள் நிலைமை பற்றி எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் அரசு உள்ளது.
வழக்கறிஞர்கள், கவுன்சில் வழங்குவோர், கலைத்துறையை சார்ந்தோர் இவர்களில் சிலர் உண்மையாகவே நல்ல பொருளாதார நிலைமைகளில் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் 1 பில்லியன் முறைசாரா தொழிலாளர்கள் உள்ள ஒரு நாட்டில் இந்த மேல்தட்டு முறைசாரா தொழிலாளர்கள் என்பது மிக மிக குறைந்த அளவே ஆகும்.
மேற்சொன்ன ஆய்வு என்ன சொல்கிறது என்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னை விட தற்போது வழக்காக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் பலரும் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்கின்றனர். ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கக்கூடிய தளங்களில் வேலை செய்வோரின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. ஆனால் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 21% பேர் தான் முறையான ஊதியம் பெறுவோர், இந்த 21% தில் வெறும் 54% தொழிலாளர்கள் மட்டுமே சமூக பாதுகாப்பு உடன் கூடிய வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்தியாவிற்கு நல்ல வேலை தேவை:
இது மாற வேண்டும் ஏனெனில் 2050ல் வளர்ந்த நாடுகளில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கும். 350 மில்லியன் வரை உயர உள்ள மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தே இருக்கும். ஆதலால் வருங்கால சேமிப்பு மற்றும் மருத்துவ சேமிப்பு போன்ற சேமிப்புகளை எல்லாம் இழந்து குறைந்த பலன்களை தர கூடிய பணிகளுக்கு அரசு தீர்வு தர வேண்டும். இல்லை எனில் தன்னுடைய வரி வருவாய்க்கு எதிர்காலத்தில் மிகக்குறைந்த தொழிலாளர்களையே பயன்படுத்த முடியும்.
ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு இப்பிரச்சினையை சாமர்த்தியமாக கையாண்டுள்ளனர். மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவிடம் தன்னுடைய முறைசாரா தொழிலாளர்களின் மோசமான பணிச்சூழலலை எப்படி மாற்ற உள்ளது.
பிரச்சனை என்னவென்றால், கொள்கை வகுப்பாளர்கள் 2017 சரக்கு மற்றும் சேவை வரி கொள்கையை நம்பியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, அதிக வருவாய் வசூல் என்பது மிகவும் முறையான பொருளாதாரத்தைக் குறிக்கிறது. தங்கள் விருப்பத்தை அதிகரிக்க முயற்சிப்பதில், அவர்கள் ஜிஎஸ்டியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியுள்ளனர்.
இவ்வாறு வரிச் சுமை சிறிய நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டியின் முக்கிய வாக்குறுதியின் மூலம், நாட்டை ஒரே சந்தையாக ஒன்றிணைப்பதன் மூலம் உற்பத்தித்திறன் ஆதாயமானது, கிட்டத்தட்ட முழுவதுமாக பெரிய வணிகங்கள் மற்றும் டிஜிட்டல் ஸ்டார்ட்அப்களுக்கு சென்றுள்ளது. அதாவது பணியாளர்களின் ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டும்.
மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட மறைமுக வரிகளில் பலவற்றை ஜிஎஸ்டி மாற்றியமைத்துள்ளதால், அவர்களில் பலரை ஏமாற்றமடையச் செய்துள்ளது, குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு.
“இப்போது தன்னையே விழுங்கக்கூடிய மற்றும் தனக்காக எந்த வேலையும் செய்ய முடியாத ஓன்றை போல் தோன்றும் ஜிஎஸ்டி யை ஒப்புக்கொள்வதற்கு மாநிலங்கள் கணிசமான சுயாட்சியை விட்டுவிட்டன” என்று லண்டனை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான ODI இன் பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் சமீபத்தில் எழுதினார்.

இந்தியாவின் தரமற்ற வேலைவாய்ப்புகள் ;
பொருளாதாரத்தை முறைப்படுத்த மோடி அரசின் மற்றொரு உத்தி தொழில் கொள்கை. தாராளமான ஐந்தாண்டு தொகுப்பு $24 பில்லியன் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை தொழிற்சாலைகளை அமைப்பவர்களுக்கு காத்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிவரங்களின்படி, இந்த திட்டம் 200,000 க்கும் குறைவான வேலைகளை உருவாக்க முடிந்தது. அப்போதுதான் 40 மில்லியன் இந்தியர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

அதிக அளவிலான முறைசாரா பொருளாதாரத்தால் வளர்க்கப்படும் பாதுகாப்பின்மை சில PHD கள் மற்றும் பொறியாளர்களைக் கூட எங்கோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் பொதுவான வேலைகளுக்கு மாற போட்டியிட வைக்கிறது. அங்கு குறைந்தபட்சம், அவர்கள் பதவிக்காலம் மற்றும் ஓய்வூதிய பலன்களின் ஸ்திரத்தன்மையைப் பெறுவார்கள் என்ற அடிப்படையில்.
மோடியின் அரசியல் எதிரிகள், நிதி ரீதியாக அழிவுகரமான வரையறுக்கப்பட்ட-பயன் ஓய்வூதியத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்ததன் மூலம் வாக்காளர்களின் அமைதியின்மையைத் தூண்டியுள்ளனர். இரண்டு தசாப்த கால முன்னேற்றத்தை வீணடித்து, தொழிலாளர்களின் பணி ஓய்வுக்காலத்திற்கு பங்களிப்பதுடன், அவர்கள் கடைசியாக வரையப்பட்ட ஊதியத்தில் பாதிக்கு உத்தரவாதம் அளிப்பது எதிர்கால வரி செலுத்துவோர் மீது சுமையை உருவாக்கும். இது பொருளாதார பிரமிட்டின் அடிமட்டத்தை இலக்காகக் கொண்ட நலன்புரி நிதியையும் கட்டுப்படுத்தும்.
இன்ஸ்டாகிராம் வாழ்க்கைக்கும் எதார்த்த வாழ்க்கை முறைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது – தொலைதூர கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் இப்போது விரும்புகின்ற வாழ்வில் – சரியான ஒப்பந்தங்கள், ஊதிய விடுப்பு அல்லது சமூக-பாதுகாப்பு சலுகைகள் இல்லாமல் வரும் வேலைகள் அதிகரித்து வருகிறது.
வேலைச் சந்தை, இரண்டு பெரிய மற்றும் மிகவும் பின்தங்கிய குழுக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் காரணமாக, முறைசாரா தன்மை பழமையானதாக உள்ளது என வெளிப்படுகிறது.
முதலில் பெண்கள், வீட்டிற்கு அருகாமையில் முறையான வேலையைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள், இதனால் அவர்கள் வீட்டு வேலைகளுடன் அதன் தேவைகளை சமப்படுத்த முடியும். சமூக விதிமுறைகள் (மற்றும் பாதுகாப்பு கவலைகள்) உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இதற்கிடையில், அடக்குமுறை, படிநிலையில் அடிமட்டத்தில் உள்ள சாதிக் குழுக்களான தலித்துகள், அன்றாடக் கூலி வேலைகளில் சிக்கித் தவிக்கின்றனர். 76% விசயங்களில், அடுத்த தலைமுறைக்கு இவ்வாறு தீய சுழற்சி மீண்டும் மீண்டும் வருகிறது. தடைபட்ட பொருளாதார இயக்கமே பிரச்சனை.
பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு சிறந்த விளைவுகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் ஒரே இரவில் பலனைத் தராது, ஆனால் முறைசாரா வேலையை வெறும் வரி ஏய்ப்பின் துணைப் பொருளாகக் கருதுவதை விட அவை சிறந்ததாக இருக்கலாம். முறைசாரா தொழிலாளர்களை வரி ஏய்ப்பிற்கு பயன்படுத்தும் அணுகுமுறை தெளிவாக தோல்வியடைந்துள்ளது.
– ஆண்டி முகர்ஜி, கட்டுரையாளர், 18 அக்டோபர் 2023 அன்று ப்ளூம்பெர்க் ஊடகத்தில் “India’s War on Informal Labor Is Bad for Workers” என்ற தலைப்பில் வெளியான கட்டுரை.
(கட்டுரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு மட்டுமே செய்யப்பட உள்ளது. இக்கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களுக்கும் தமிழ் மார்க்ஸ் பொறுப்பு இல்லை மேலும் உடன்பாடும் இல்லை, சில இடங்களில் ஒத்த கருத்துகளை கொண்டுள்ள அடிப்படையில் மட்டுமே இக்கட்டுரை இத்தளத்தில் வெளியிடப்படுகிறது.)