தனிமனித சுதந்திரம், உலக அமைதி ஆகியவற்றை உலக நாடுகளுக்கு பாடம் எடுக்கும் அமெரிக்காவின் உண்மை முகம் தெரியுமா உங்களுக்கு?
18 – 26 வயதுடைய இளைஞர்கள் கட்டாயமாக இராணுவ சேவையில் தங்களை பதிந்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்க அரசு கடந்த வெள்ளிக்கிழமை (14 ஜூன் 2024) இயற்றியுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் 18 வயது முதல் 26 வயதுள்ள இளைஞர்கள் கட்டாயம் தங்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மீது பாயும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஒரே ஒரு சட்டத்தின் மூலம் 18 வயது கடந்த இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான வேலையை தாங்களே தேர்ந்தெடுக்கும் (பெயரளவிலான) உரிமை கூட தற்போது பறிபோகியுள்ளது.
மூன்றாம் உலகப்போர்

தற்போது நிகழும் போர்களின் தீவிரம் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடிய அபாயமும் உண்டாகியுள்ளது.
தனிமனித சுதந்திரம் மற்றும் உலக அமைதிக்க காப்புரிமையை அமெரிக்கவிற்கு வழங்கியுள்ள அறிவிஜிவிகள் தற்போது எங்கே சென்றனர் என்ற கேள்வி நமக்கு எழாமல் போவதில்லை.
சரி இவ்வாறு அமெரிக்க சட்டம் இயற்றியிருப்பது இது தான் முதல் முறையா? என்றால் அது தான் இல்லை.
1917 முதல் உலகப்போரின் போது தான் முதன்முதலில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பின் 1920ல் கைவிடப்பட்டது.
1940ல் மீண்டும் அமல்படுத்தப்பட்டது,
1948ல் இச்சட்டத்தின் மீது மறுசீரமைப்பு செய்யப்பட்டது, 1975ல் தன்னார்வ சேவை என்ற அடிப்படையில் கட்டாய ராணுவ சேவை என்பது மாற்றப்பட்டிருந்தது.
பின் 1980ல் ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்க்கப்படும் அபாயத்தை தடுக்க சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் நுழைந்தபோது, அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டர், மீண்டும் கட்டாய இராணுவ சேவையை நடைமுறை படுத்தினார். இச்சேவையில் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, அன்றைய காலகட்டத்திலேயே $25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது வருடத்திற்கு 1,00,000 பேர் அல்லது அதற்கும் அதிகமான இளைஞர்கள் அரசின் இந்த கட்டாய இராணுவ சேவை நடைமுறைக்கு கீழ்ப்படியாத காரணத்தால் அமெரிக்க அரசு வேலைகளில் சேர்வதற்கு, மாணவர் கடன் பெறுவதற்கு மற்றும் (40 மாகாணங்களிலும்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கவின் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. National Defense Authorization Act (NDAA) என்ற இச்சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு $895 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரஷ்யா – உக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் இவ்விரு போர்களிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்ப்பட்டுக்கொண்டு இருக்கும் பின்னணியில் இச்சட்டம் இயற்றப்படுவது மற்றொரு மிகப்பெரிய போருக்கு (அது மூன்றாம் உலகப்போராக கூட இருக்கலாம்) இவ்வுலகை அமெரிக்க அழைத்து செல்லவிருக்கிறதா? என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
தோழர் பாலா