மகப்பேறு சேவையில் முதலாளித்துவத்தின் தாக்கங்கள்

அன்னா பீல்டர் “Going into labour” என்ற புத்தகத்தில் முதலாளித்துவம், குழந்தை பிறப்பு அனுபவத்தையும் அதற்கான பயிற்சியையும் எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை பற்றி பேசுகிறார்

முதலாளித்துவம் மனித வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது. குழந்தை பிறப்பும் அதற்கு விதிவிலக்கல்ல எப்போதும் போலவே அதற்கே உரித்தான பண்புகளின் அடிப்படையில் வடிவமைத்திருக்கிறது. மற்ற மருத்துவப் பிரிவுகளில் ஒப்பிட்டு பார்த்தால் உடல் நலம் & பராமரிப்பபில் புதுமையான வழிமுறைகள ஆய்வு செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்த பேட்டியில் முன்னாள் பேறுகால உதவியாளர் அன்னா பீல்டர். “Going Into Labour” முதலாளித்துவத்தில் பேறுகால வழிமுறைகளில் என்ன புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அதன் தடைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்கிறார்

 

நிருபர் : உங்களுக்கு இந்த புத்தகம் எழுதத்தோன்றியது ஏன்?

அன்னா: பல ஆண்டுகளுக்கு முன்பாகவே துவங்கிவிட்டதென்று நான் நினைக்கின்றேன். எனது தாயார் ஒரு பேறுகால மருத்துவர் அதனால் குழந்தை பிறப்பு பற்றி விவாதிப்பது எங்களது அன்றாட வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்தது பிறகு நானும் இங்கிலாந்தில் பேறுகால மருத்துவர் ஆனேன். இதே துறையில் பயிற்சிப் பெற்று வேலை செய்யும்பொழுது இதிலுள்ள அரசியலும் தெரிய வந்தது.

மகப்பேறு மருத்துவத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது பிரசவகால பராமரிப்பல் ஆணாதிக்க தாக்கத்தை பேசி இருக்கிறோம் இன்னும் அதை பற்றி பேச  வேண்டிய தேவை இருக்கிறது  குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் மகப்பேறு சேவைகளில் நிறுவனமயமாக்கப்பட்ட இனவெறி ஆழமாகியுள்ளது, தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது  இந்த பிரசவ கால சேவைகளில் .  இதை ஏன் நான் “பிரசவ கால சேவைகள்” என சொல்கிறேன் என்றால் குழந்தை பெற்றுக் கொள்கிற எல்லாப் பெண்களும் தங்களை தாயாக அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. எனக்கு அடிக்கடி இந்த கேள்வி எழும் அப்படி அவர்களை தாயாக வைத்து கொண்டாலும் உண்மையில் இந்த சேவைகள் ஒரு தாய்க்கு உதவுகிறதா? 

இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் நிறைய அற்புதமான வேலைகள் நடந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக மவோரி கல்வியாளர்கள், அவ்ட்யரோவா,நியூசிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பழங்குடியின மக்கள் அவரவர் சமூகத்தில் உள்ள வழிமுறைகள், குழந்தைபிறப்பு சேவைகளை வடிவமைத்திருக்கிறார்கள். முக்கியமான ஆய்வுகள் cis-heteronormativity அதாவது பிறக்கும் போது ஒருவருக்கு இருக்கும் பாலினம் (இதனை சமூக பாலினம் எனவும் சொல்லலாம்).இது  சார்ந்து சேவைகள் வழங்குவது குறித்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பிரசவகால சேவைகள் பற்றிய விவாதங்களில் விடுபடுவது இதில் முதலாளித்துவத்தின் பங்கு என்ன என்பதே. நாம் சில நேரங்களில் பேசும்போது பிரசவ சேவைகளை ஒரு சரக்காகவும் லாபம் தரும் ஒரு சேவையாகவும் இருப்பதை பற்றி விவாதிப்பதில்லை முதலாளித்துவத்தின் நேரடியான தாக்கம் இதில் இருப்பதை நாம் இன்னும் விவாதம் செய்வதில்லை. முதலாளித்துவம் வெளியில் இருந்து ஆதிக்கம் செலுத்துவதில்லை. மக்கள் முதலாளித்துவத்தில் தான் வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் இருந்தும் குழந்தைப்பேறு பற்றிய புத்தகங்களில் முதலாளித்தின் பங்கு என்ன என்பதை பற்றி அதிகமாக பார்த்ததில்லை. நான் பங்கேற்கும் விவாதங்களில்  பிரசவத்தில் உள்ள அரசியல் பற்றியோ முதலாளித்துவத்தை பற்றியோ அவ்வளவாக குறிப்பிடப்படுவதே இல்லை. மார்க்சியத்தை பற்றி குறிப்பிடுவது அதை விட குறைவு.

அதே நேரத்தில் நான் இருபது வயதுகளில் இடதுசாரி அரசியல் தொடர்பில் இருந்தபோதும் அவர்களது கூட்டங்களில் கலந்து கொண்டபோதும் உழைப்பு பற்றிய நிறைய விவாதங்கள் இருந்தது. ஆனால் மகப்பேறு பற்றி இல்லை. உழைப்பு பற்றிய விவாதமும் எப்போதும் வேலை, கூலி, உற்பத்தி,சுரண்டல் பற்றி இருந்தது. இதுவும் ஒரு முக்கியமான விஷயம் என்றாலும் எனக்கு – “மகப்பேறு அரசியல் மற்றும் மார்க்சிய சிந்தனைகள்” – இந்த இரண்டு உலகங்களும் சந்தித்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

முதலாளித்துவத்தை விவாதத்திற்குள் கொண்டுவராமல் இதன் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ள முடியாது. மகப்பேறு பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வற்புறுத்தலை ஒழிப்பதற்கும், பிரசவத்தை பாதுகாப்பானதாக்குவதற்கும் பல முயற்சிகள் மெதுவான வேகத்தில் செயல்படத் தொடங்கி, பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.

இந்த நிலைமைகளை உருவாக்கியதில் முதலாளித்ததின் பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .  

இந்த திட்டம் ஒரு ஆய்வறிக்கையாகவே தொடங்கியது பின்னர் புத்தகமாக மாறியது. ஏனெனில் எனக்கு இவ்விரு உலகங்களையும் ஒன்றாக கொண்டுவரவேண்டிய விருப்பம் இருந்தது. முதலாளித்துவம் பல்வேறு வழிகளில் பிரசவகால சுகாதார சேவைகளை பெரும் வலி நிறைந்ததாக மாற்றி வைத்திருக்கிறது அதை நான் வெளிப்படுத்த விரும்பினேன்.

——-

நிருபர்: உங்கள் பார்வையில் , முதலாளித்துவம் சமகால பிரசவ முறைகளை எவ்வாறு கையாள்கிறது?

அன்னா: இது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இன்று சில சுகாதார சேவைகள் தனியார் நிறுவனங்களாகட்டும், அரசு சேவைகளாகட்டும் அல்லது லாப நோக்கமில்லாத நிறுவனங்களாகட்டும் முதலாளித்துவ அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. செலவுகளை குறைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக வேலைப்பளுவை (செவிலியர்கள் மருத்துவர்கள் மீது ) சுமத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இது நோயாளிகளின் நலனை  கவனிக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர்களான சுகாதர ஊழியர்களுக்கு  கடும் நெருக்கடியை கொடுக்கிறது. பொது சுகாதாரத்துறையாக இருந்தாலுமே மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள்  லாபத்திற்காக தயாரிக்கப்படும் துறையாகவே உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.. இது பலவழிகளில் மகப்பேறு மருத்துவ துறையிலும் பல வழிகளில் தாக்கம்  செலுத்துகிறது

ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர விரும்புகிறேன். 2016ல் Too little, Too Late and Too Much, Too Soon  என்ற தலைப்பில்  ( மிகவும் சிறியது, மிகவும் தாமதமான மற்றும் மிக மிக விரைவில் ) தி லான்செட் இதழில் பேராசிரியர் சுள்ளேன் மில்லர் மற்றும் அவரது குழு எழுதிய ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் பிரசவகால சேவைகளின் ஏற்றத்தாழ்வை பேசியிருப்பார்கள். சிலருக்கு மருத்துவ சேவைகள் மிக குறைவாக தாமதமாம சென்றடைகிறது சிலருக்கு அது விரைவாகவும் அதிகமாகவும் \ கிடைக்கிறது.

இந்த கட்டுரை பிரசவகால மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளுக்கு தேவைப்படும் போதுமான வசதிகள் இல்லாததை பற்றியும் அதனால் குழந்தை பெரும் போது ஏற்படக்கூடிய பிரசவகால மரணங்கள் குறித்து பேசுகின்றது. இந்தப்பிரச்சனை.முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளான தெற்குலக நாடுகளில் உள்ளது  பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கூட பிரசவகால பராமரிப்பு இல்லாத நிலை இருக்கிறது

இன்னொரு பக்கம் “மிக அதிகம், மிக விரைவு”  ஓரளவுக்கு வசதி படைத்த மறுபுறம், உலகளாவிய வடக்குலக நாடுகளுடன்  தொடர்புடையது – இது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் மற்றும் பொதுவாக உலகளாவிய தெற்கு நாடுகளிலும் தெளிவாகத் தெரிகிறது. 

அதாவது இது மருத்துவரீதியாகத் தேவையில்லாத மருத்துவத் தலையீடுகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறிக்கிறது. உதாரணமாக சொன்னால்  தேவையற்ற அறுவைசிகிச்சைகள் அல்லது உடல்நலனுக்கு நன்மை கொடுக்காத  சிகிச்சைகளை கொடுப்பது. .சிலர் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை பெற முடியாமல் இருப்பது, அதே நேரத்தில், சிலருக்கு மிதமிஞ்சிய சேவைகள் கிடைக்கப்பெறுவது.இந்த இரண்டு முரண்பாடான நிலைமைகளும்  கணிசமான முறையில் சமூக சீரற்ற தன்மைகளை வெளிப்படுத்துகிறது.

மில்லர் மற்றும் அவர்களின் சகாக்கள் முன்வைத்த வாதத்திற்கு மேலும் விரிவுபடுத்தி, இவ்வளவு விகாரங்கள் முதலாளித்துவத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, மேலும் தீவிரமாக்கப்படுகின்றன.

பிரசவகால பராமரிப்பில் தவறுகள் நிகழலாம், மேலும் சில நேரங்களில் தேவைப்படும் மருத்துவச் சேவைகள் கிடைக்காமல் போகலாம்; அல்லது அவசியமில்லாத நிலையில் கூட தேவைப்படாத மருத்துவமுறைகள் கையாளப்படலாம். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும், ஆனால் இங்கே முக்கியமாக கவனம் செலுத்தப்படுவது தனிப்பட்ட பிழைகள் அல்ல – அதை இயக்கும் கட்டமைப்பு களே 

இது தனிநபர் முடிவுகளைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக, கர்ப்பம் மற்றும் பிறப்பு பராமரிப்பை கட்டமைப்பை பற்றியது.

“too little, too late” / “too much என்ற கட்டமைப்பானது, முதலாளித்துவம் மகப்பேறு பராமரிப்பை எப்படி பாதிக்கிறது அதை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. ஒரு பக்கம், சில சூழ்நிலைகளில் வளங்கள் மறுக்கப்படுகின்றன (முக்கியமாக, அவை செலவு அதிகமானதாகவோ அல்லது லாபம் உருவாக்க முடியாது எனக் காணப்படும் போது). மறுபுறம், லாபம் பெற முடியும் என்ற இடங்களில், அவை பெரிதும் விரிவுபடுத்தப்படுகின்றன.

இது எளிமையான சமன்பாடு அல்ல இதில் பிற காரணிகளும் செயல்படுகின்றன. ஆனால் முதலாளித்துவத்தில், மக்களுக்குப் பதிலாக லாபம் முன்னிலையில் வைக்கப்படும் அபாயம் உண்மையாகவே உள்ளது.

முதலாளித்துவம் இதை காலனிய ஆதிக்கம் மற்றும் இன ஆதிக்கத்தால் வடிவமைத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கர்ப்பத்துடன் தொடர்புடைய இறப்புகளில் சுமார் 95% ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நடந்துள்ளதாக கூறுகிறது.

அமெரிக்காவில், கருப்பின பெண்களின்  பேறுகால இறப்பு விகிதம் வெள்ளை இன பெண்களை காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளிலும் இதேபோன்ற கடுமையான சீரற்ற தன்மைகள் காணப்படுகின்றன; உலகெங்கும் இதேபோன்ற நிலையே காணப்படுகின்றது.

——-

நிருபர்: இந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில், பிரசவகால மருத்துவத்தில் வியாபார மோகம் என்ற கருத்தையும், அது எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் ஆராய்கிறது. இந்தக் கருத்து பிரசவகால  சூழலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க முடியுமா? மருத்துவ தொழில் நுட்பத்தின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு  கடந்த சில பத்தாண்டுகளில் பிரசவத்தை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது?

அன்னா : இந்த புத்தகத்தில் லாபத்தை மட்டும் பார்க்கும் வியாபார மோகத்தை   பல வழிகளில் விவரித்திருக்கிறேன், இதனை நிறைய விதமாக புரிந்துகொள்ளலாம்.

மார்க்சிய பார்வையில், வியாபார மோகம் (commodity fetishism) என்பது ஒரு பொருள் வணிகப் பொருளாக மாறும்போது அதன் மாயசக்தி மற்றும் மதிப்பு அதன் உருவாக்கத்தில் உள்ள சமூக உறவுகளை மறைத்து விடுகிறது . இது உலம் முழுவதும் அந்த  பொருளை உற்பத்தி செய்யும்  பணியில் ஈடுபட்டு அதற்கு முழு வடிவம் கொடுத்த  பலரின் உழைப்பு, எல்லாம் காணாமல் போகிறது. இதேபோன்று இன்னொன்றும் நடக்கிறது, சில பொருள்களுக்கு இயல்பாக இல்லாத  மந்திர சக்திகள் இருப்பதாக திணிக்கப்படுகிறது.

இவ்வாறான மோகத்தை பற்றிய மனோவியல் (psychoanalytic) விளக்கங்களும் உள்ளன, ஆனால் பிரசவ கால சூழலில் இந்தக் கருத்துகள் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு ஆராய்ந்துள்ளேன்  .

முதலாளித்துவ சமூகத்தில் நிலவும் ஒரு அனுமானம் என்னவென்றால், வளர்ந்துள்ள தொழில்நுட்பம் பிரசவ   காலத்தில் ஏற்படும்  எதிர்பாராத ஆபத்துகளை (uncertainty) குறைத்து, அதை இயல்பாகவே பாதுகாப்பானதும் கணிக்கக்கூடியதுமாக மாற்றும் என்பதே. இது தொழில்நுட்ப மோகத்தின் (technological fetishism) ஒரு வடிவமாகும் – அதாவது, மருத்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி  தானாகவே நல்ல முடிவுகளை ஏற்படுத்தும், அது பிரசவத்தை பாதுகாப்பானதாக  மாற்றும் என்ற  ஒரு மாயத்தோற்றம்  கொண்டுள்ளாதே   அதன் மீதான நம்பிக்கைக்கு காரணம்.

சில தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தினால், அவை உயிர்களை காப்பாற்ற உதவும். உதாரணத்திற்கு, சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் பிரசவம் (Cesarean section). “தேவையான நேரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை வாய்ப்பை பயன்படுத்துவதை நான் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்”.

ஆனால், மற்றொரு புறத்தில், மருத்துவ தொழில்நுட்பங்களை  தொடர்ந்து  பிரசவத்தில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதில் மருத்துவ ரீதியாக மற்றும் பிரசவம் செய்யும் நபருக்கு  தேவையில்லாத அறுவைசிகிச்சை  பிரசவங்களும் அடங்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின்  (WHO) மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சை மூலம்  நடத்தப்படும் பிரசவம்  10-15% இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது . ஆனால் இன்று பல நாடுகளில், 40% மேல் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைபேறு நடைபெறுகின்றது .இன்னும் சில இடங்களில் 50%க்கும் மேல் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறுகின்றன. இது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. அவசியமில்லாமல்வயிற்றில்  பெரிய அறுவை சிகிச்சை செய்யப்படும் போது, அது அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர்களுக்கு தவிர்க்கப்பட வேண்டியவைகளான  காயத்தில் நோய் தொற்று மீண்டும் கர்ப்பம் தரிப்பதில்  சிக்கல்கள் (complications in future pregnancies), மற்றும் பிரசவத்தில் கருப்பை பிளவு (uterine rupture during labor) போன்ற மோசமான அபாயங்களை ஏற்படுத்தலாம். தெளிவாக சொல்ல  வேண்டும் என்றால் , நான் பிரசவத்திற்கு  பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திற்கு எதிராக பேச இல்லை. அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பங்கள் மீது ஏகபோக மூலதனம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. மக்கள் எப்போதுமே கர்ப்பத்தையும் பிரசவத்தையும் கையாள கருவிகள், மூலிகை மருந்துகள், பிரசவ நாற்காலிகள் மற்றும் பிற உதவிப் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர், இவை அனைத்தையும் ஒரு வகையான தொழில்நுட்பங்களாக கருதலாம். ஆனால் எனக்குத் தீவிரமான ஆர்வத்தை ஏற்படுத்துவது, இன்றைய மகப்பேறு மருத்துவ (obstetric) தொழில்நுட்பங்கள் சிலபிரசவத்தின் சவால்களை தீர்க்கத் தனியாக ஏதோ மந்திரசக்தி  கொண்டவை போல   காட்டப்படுவது தான். 

மார்க்சியப் பார்வையில் “மோகம் ” (fetishism) பற்றிய புரிதலுக்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறது. முதலாளித்துவத்தின் கீழ், எவ்வகையான சமூக உறவுகள் மருத்துவ தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்ந்த தகுதியை வழங்குகின்றன? அவற்றின் பயன்பாடு இயல்பாகவே “மேலானது” என்று ஏன் கருதப்படுகிறது? எல்லா பிரசவங்களுக்கும் அதீத தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படுவதில்லை அவ்வாறு நடந்தால் பன்னாட்டு மருத்துவ தொழில்நுட்ப/மருந்து நிறுவனங்களுக்கு குறைந்த லாபத்தையே தருகிறது என்பதன் காரணமாக  இதை மேலானதாக கட்டமைக்கிறார்களா? இந்த சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுவதும், விற்கப்படுவதும், பயன்படுத்தப்படுவதும் வணிக லாபத்தை உருவாக்குகின்றன என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

காப்பீட்டு நிறுவனங்களின் கொள்கைகள்—வெவ்வேறு சிகிச்சை முறைகளுக்கான பணம் செலுத்தும் விகிதங்கள் உட்பட அறுவைசிகிச்சை  பிரசவ விகிதங்களை  பாதிக்கக்கூடும். உலக சுகாதார நிறுவனம் (WHO) காப்பீட்டு சீர்திருத்தங்கள் குறித்த கூடுதல் ஆராய்ச்சியின் தேவையை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இது வெறும் பணம் அல்லது லாபம் மட்டுமல்ல; பொதுவாக நம்பப்படுவது போல், சில பெண்கள் உண்மையிலேயே அறுவைசிகிச்சை  மூலம்  குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், இதைவிட ஆழமான சமூக-பொருளாதார காரணிகள் இங்கு உள்ளன.

நான் ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். இந்தியாவிலுள்ள தில்லியில் 2018-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது தனியார் மருத்துவமனைகளில குறிப்பிடத்தக்க அளவில் அதிகமான அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும்  விகிதம் அதிகமாக இருப்பதை கண்டறிந்தது. வணிக நலன்கள் மறைமுகமாக செலுத்தும்  தாக்கமெ   இதற்கு காரணம் என்று ஆய்வு சுட்டிக்காட்டியது. தனியார் சிறப்பு மகப்பேறு மருத்துவர்கள், குறைந்த ஊழியர் ஆதரவுடன் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை சமாளிக்கும் சூழலில் இயங்குகின்றனர். இந்த ஆய்வில் சந்தித்த  ஒரு மருத்துவர் இவ்வாறு கூறினார்: “ஒரு இயல்பான முறையில் பிரசவம்  நடக்க குறைந்தது ஒரு நாள் அல்லது  இரண்டு நாட்கள் koodaதேவைப்படும் ஒரு மாதத்தில் 10-15 இயல்பான பிரசவங்கள் நடந்ததால்  நான் வீட்டிற்கு தூங்குவதற்கு கூட போகமுடியாது. ஆனால் அறுவைசிகிச்சை மூலமாக 15 பிரசவம் பார்த்தல் நான் வீட்டில்  காபி குடிக்க செல்லக்கூட தாமதமாகாது.( அவ்வளவு வேகமாக முடிந்து விடும்) உலகம் முழுவதும் இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன.

சில சூழல்களில், மருத்துவமனையின்  வள மேலாண்மைக்காக அறுவை சிகிச்சை . பிரசவ வார்டில் படுக்கைப் பற்றாக்குறை இருந்தால் ஏற்கனவே இருப்பவர்களை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய   அழுத்தம் இருந்தால், பிரசவம் தானாக  நடக்கும் வரை காத்திருக்காமல், அறுவை சிகிச்சைசெய்வது எளிதாகவோ அல்லது வசதியாகவோ இருக்கலாம். இதன் பொருள் அசட்டையான முறையில்  அறுவை சிகிச்சை  பிரசவங்கள் செய்யப்படுகின்றன என்பதல்ல, மாறாக அமைப்பு சார்ந்த அழுத்தங்கள் முடிவெடுக்கும் செயல்முறையை பாதிக்கின்றன. இந்த முடிவுகள் பெரும்பாலும் பயனாளியின் நன்மைக்காக செய்யப்படுவதில்லை.

தொழில்நுட்ப மோகம் (technological fetishism) என்ற கருத்துக்குத் திரும்புவோம்.  அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அல்லது பிரசவத் தூண்டல்கள் (inductions of labour) மிக அதிகம் அல்லது மிகக் குறைவு என்று மட்டும் பேசாமல், இந்த முறைகளை பாதிக்கும் இந்த முதலாளித்துவ கட்டமைப்பின் அழுத்தங்கள்  மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.

பாதுகாப்பான அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெரும்  சேவையை பெற இயலாதபோதும் இதே தர்க்கம் பொருந்தும். மகப்பேறு மருத்துவ தேவைகள் இருக்கின்றது. ஆனால் லாபம் ஈட்ட முடியாத பகுதிகளில் பிரசவப் பிரிவுகளை மூடுவது அல்லது புதிதாகத் திறப்பதில் தோல்வி ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதில் முதலாளித்துவத்தின்  ஆதிக்கம் இருப்பதை பற்றி பேசத் தொடங்குவோம். தொழில்நுட்பம் அல்லது உபகரணங்களை அவை தானாகவே செயல்படும் manthira சக்திகள் போன்று ஆராதனை செய்யாமல் இருக்க முயற்சிப்போம்.

நிருபர்: அதே அத்தியாயத்தில், பிரசவத்தின் செயல்திறன் மேலாண்மை (active management of labor) மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ளும்   நிகழ்வுகள்  அதிகரிப்பது  பிரசவத்தின் கட்டமைப்பை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதையும் நீங்கள் விவாதிக்கிறீர்கள். யார் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்? பிரசவ அறையில் அதிகாரம் உள்ளவர் யார்?, மற்றும் பிரசவிக்கும் நபருடன் அதிகம் தொடர்பு கொள்பவர் யார்? போன்றவற்றில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

அன்னா : பிரசவத்தின் செயல்திறன் மேலாண்மை முறை (active management of labor) என்பது டப்லினில்(dublin) உள்ள தேசிய பிரசவ மருத்துவமனையில் ஒரு மகப்பேறு சிறப்பு மருத்துவரான கியேரன் ஓ’ட்ரிஸ்கல் (Kieran O’Driscoll) என்பவரால் உருவாக்கப்பட்ட நெறிமுறையாகும். இந்த கட்டுப்பாடான  அணுகுமுறையில் பின்வரும் படிகள் அடங்கும்:

  1. பிரசவம் தொடங்கியதை உறுதி செய்தல்.
  2. கருப்பை வாய் விரிவடைவதை  (cervical dilation) கண்காணித்தல்.
  3. கருப்பை விரிவடைவது  எதிர்பார்த்தபடி இல்லா விட்டால், நீர்ப்பையை  உடைப்பது  (breaking the waters)
  4. சில சந்தர்ப்பங்களில் பிரசவத்தை வேகப்படுத்த  செயற்கை ஆக்ஸிடோசின் (synthetic oxytocin)** ஊசி போடுவது .
  5. 12 மணி நேரத்திற்குள் பிரசவம் நிகழாவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பது.  செய்தல்.

இந்த முறை “பிரசவத்தின் செயல்திறன் மேலாண்மை” என்ற பெயரில் இருந்தாலும்  இது பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் போன்ற சுகாதார பணியாளர்களின் வேலையை மேலாண்மை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது . பல வகைகளில், இது டெய்லரிச அடிப்படைக் கோட்பாடுகளை (Taylorist principles) ஒத்துப்போகின்றது– ஒவ்வொரு வேலையாக பிரித்து நேரக்கட்டமைப்பு செயல்முறைகளாக மாற்றி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக வகுக்கப்பட்டதாகவே பிரதிபலிக்கிறது.

இந்த முறை பொருளாதார நோக்கத்தை கொண்டுள்ளது என்பதை ஓ’ட்ரிஸ்கல்ஒப்புக்கொண்டார். அவரது புத்தகத்தில், தாம் பணியாற்றிய மருத்துவமனையில் செயல்திறன் மேலாண்மை முறையை அறிமுகப்படுத்திய பிறகு, unit cost of production ( பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட  சம்பளத்தின் தொகை விகிதம்) கணக்கிட்டால் மற்ற மருத்துவமனைகளை விட எனது மருத்துவமனையில் மூன்று மடங்கு அதிகம் (ஊதிய வேறுபாடு) இருந்ததாக எழுதினார். அதாவது செவிலியர்களின் ஊதியம்  அப்படியே மாறாமல் இருந்தது. ஆனால் அவர்கள் அதிக பிரசவத்தை  கையாண்டிருக்கிற்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது, பிரசவ வார்டுகளில் நல்ல பராமரிப்புக்கு பதிலாக திறன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. பிரசவத்தின் செயல்திறன் மேலாண்மையின் கூறுகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.எனினும் அவை ஓ’ட்ரிஸ்கல்லின் சரியான வடிவத்தில் அல்ல இன்று அறுவை செய்கிசை மூலமாக பிரசவங்களின் அதிகரிப்பிற்கும் இதே அழுத்தமே காரணம்

ஆனால், ஓ’ட்ரிஸ்கல்லின் ஆரம்பகால நெறிமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இருந்தது: பிரசவிக்கும் பெண்ணுக்கு  நேரடி பராமரிப்பு (  பிரசவம் நடந்து முடியும் வரை ஒரு செவிலியர்  கர்ப்பிணியுடன் அறையில் உடனிருப்பது). ஆனால், இன்று இந்த நடைமுறை  அரிதாகவே பின்பற்ற ப்படுகிறது. பிரசவப் பிரிவுகள் பெரும்பாலும் மிகவும் அவசரகதியில் உள்ளன. இதனால் செவிலியர்கள் (midwives)ஒரே நேரத்தில் பலரை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மின்னணு கருப்பை குழந்தை கண்காணிப்பு சாதனம் இன்னொரு வகையான  மருத்துவ சாதனம் . இது தொழில்நுட்ப  மோகத்தின் பார்வையில் சிறப்பாக ஆராயத்தக்கது.இந்தக் கருவி பயன்படுத்தப்படத் தொடங்கியவுடன், பிரசவ அறையில் கவனம் மெல்ல மானிட்டர் திரைக்கே மாறிவிடுகிறது மானிட்டரை கண்காணிப்பதும் அதில் தெரிகின்ற விசயங்களே முக்கியமாகின்றன.  கர்ப்பிணிகள் மருத்துவர்களின் கண்ணிகளில் இருந்து காணாமல் போகிறார்கள்.ஆனால்ஆராய்ச்சிகளில் இருந்து நாம் அறிந்தது என்னவென்றால், நல்ல பிரசவ அனுபவங்கள் எல்லாம் பிரசவநேரத்தில் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும்  பராமரிப்பு உறவுகளுடன் உறுதியான  தொடர்புடையவை.

நல்ல முறையில் ஆதரவு அளிக்கும் உறவுகள் தேவை.உதாரணத்திற்கு, பிரசவிக்கும் நபருக்கும்செவிலியருக்கும்இடையிலான நம்பிக்கையான உறவு.சிசேரியன் மற்றும் பிற தேவையற்ற மருத்துவ தலையீடுகளின் வீதத்தை குறைத்து, ஆரோக்கியமான முடிவுகளை மேம்படுத்தும்.அந்த ஆதரவு பிரசவிக்கும் நபருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும், உறுதியான, பராமரிப்பு உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், இந்த உறவுகளை உருவாக்கவும் வளர்க்கவும் நேரம் தேவை. இதற்கு பிரசவம் பார்க்கும்  செவிலியர்கள் உழைப்பில் முதலீடு செய்ய வேண்டும் மேலும் அந்தப் பணியாளர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.

ஆனால் தற்போதைய சூழலில், இதற்கான தேவையான முதலீடு எளிதாக கிடைப்பதில்லை.

——-

நிருபர்: இன்றைய காலக்கட்டத்தில், பிரசவம் பெரும்பாலும் “அபாய மேலாண்மை” (risk management) என்ற உரையாடலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.நிச்சயமாக, பிரசவத்தில் எப்போதும் ஒரு அளவுக்கான நிச்சயமற்றதன்மை (uncertainty) இருக்கும். நீங்கள் முன்பே கூறியது போல இப்போது அபாயம் (risk) மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் விதம் மாறுபட்டதாகத் தோன்றுகிறது.பிரசவத்தில் அபாய மேலாண்மைக்கும் (risk management) முதலாளித்துவத்தின் உழைப்பு மற்றும் உற்பத்தித்திறனுடன் எப்படி இணைகிறது?

அன்னா : ஆமாம், அபாயம் மற்றும் நிச்சயமற்றதன்மை ஒன்றோடொன்று தொடர்புடையவை, நீங்கள் குறிப்பிட்டதுபோல. எப்போதும் பிரசவம் ஒரு அளவுக்கு நிச்சய மற்ற தன்மையை  (uncertainty) கொண்டிருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக  இது விபத்து, தலைவிதி, தெய்வத்தின் செயல் அல்லது நேரம் என்று வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றனர்.. இன்றோ அபாயத்தின் அடிப்படையில் அணுகுகிறார்கள்

அபாய பகுப்பாய்வு (risk analysis) என்பது முதலாளித்துவத்தின் மற்ற பிரிவுகளை விட நிதித் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் அதிகம் தொடர்புடையதாக எனக்குத் தோன்றுகிறது, . இது தொடர்ச்சியான நிகழ்தகவுகளின் அடிப்படையாக கொண்டது. அதாவது தவிர்க்க வேண்டிய சம்பவங்கள் எவ்வளவு நிகழ வாய்ப்புள்ளது என்பதை கணிப்பதும், இழப்புகளை குறைக்கும் உத்திகளை செயல்படுத்துவதும் இதில் அடங்கும். ஆனால் அபாயத்தை கையாள்வது  என்பது ஆரோக்கியத்தை உருவாக்குவதைப் போலல்ல. இந்த வேறுபாடு மிக முக்கியமானது.

சிலர் கூறுவது போல, அபாயத்தை கையாளும் வகையில் நெறிமுறைகளை வகுப்பது பிரசவ அறைகளில் இருப்பதற்கு தகுந்த அனுபவத்தை தராது.ஏனெனில் அது கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் அனுபவத்தை அடிப்படையையே மாற்றிவிடுகிறது. ஆனாலும், இன்றைய பிரசவத்தை அபாய சூழல் சார்ந்த உரையாடலின்றி நினைத்துப் பார்ப்பது கடினமாக உள்ளது, ஏனெனில் அது பராமரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைந்துவிட்டது.

உதாரணமாக, என் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை உங்களுக்குப் படித்து காட்டுகிறேன்:

இன்று, உணர்வழுத்தம் ஏற்கெனவே இருக்கும் மருத்துவ காரணங்கள் இரட்டைக்குழந்தைகள் அல்லது மூன்றுக் குழந்தைகள் l  கருவில் உருவாகும் போது குறிப்பிட்ட உணவுகளை உண்ணுதல், மதுபானம் அருந்துதல், முந்தைய கர்ப்பத்திற்குப் பிறகு சில மாதங்களுக்குள் கர்ப்பம் அடைதல் அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் அடைதல் சில தனிப்பட்ட உணர்ச்சி நிலைகள், மிகவும் இளமையாக’ இருப்பது ‘மிகவும் வயதானதாக’ இருப்பது , ‘மிகவும் ஒல்லியாக’ இருப்பது , ‘மிகவும் குள்ளமாக’ இருப்பது , ‘மிகவும் பருமனாக’ இருப்பது , வாழும் பகுதியில் சுற்றுச்சூழல்  மற்றும் பல்வேறு காரணிகள், கர்ப்பத்தின் போது ஏதோ ஒரு சிக்கலை, அபாயத்தை (risk) அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இப்போது கர்ப்பத்துடன் தொடர்புடைய அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது.கர்ப்பங்கள் பெரும்பாலும் “குறைந்த  அபாயம் அல்லது அதிக அபாயம் என்ற இரு  வகைகளில் பிரிக்கப்படுகின்றன. ஆனால் ஒருபோதும் அபாயமற்றது என்று கருதப்படுவதில்லை.இதனால், பிரசவம் பார்க்கும் பணியாளர்களிடம் எப்போதும் அபாயத்தை குறைக்க வேண்டிய பொறுப்பு முன்வைக்கப்படுகிறது. இது குழந்தை பெறும் நபர் (childbearing person) மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் (health outcomes) மட்டுமல்ல சட்ட ரீதியான அபாயத்தையும் (legal risk) உள்ளடக்கியதாக இருக்கிறது.

மருத்துவ சேவை குறைபாடுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் அச்சம் முக்கியமான ஒரு காரணியாக உள்ளது.ஏனெனில் மருத்துவ சேவை வழங்குபவர்கள் தங்கள் மீது வழக்கு தொடரப்படுவதைப் பற்றித் கவலைப்படுகிறார்கள். மேலும் மருத்துவ நிறுவனங்கள் தங்களின் சட்ட ரீதியிலான  பொறுப்பை குறைக்க முயலுகின்றன.

இது தொழில்நுட்ப மோகத்துடன் அதிகமாக தொடர்பு கொண்டுள்ளது. இன்றைய முதலாளித்துவ அமைப்பின் பிரசவ பராமரிப்பில், அபாயத்தை (risk) நிர்வகிக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று மருத்துவ தொழில்நுட்பங்களின் அதிகப்படியான பயன்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் வணிகப் பொருள்களாக மாற்றப்பட்டு, லாபத்திற்காக தயாரிக்கப்படுகின்றன. பல மருத்துவ தொழில்நுட்பங்களில் அதன் பயன்பாட்டால் ஏற்படும் அபாயங்கள் உள்ளன.

இதற்குப் பதிலளிக்க, முந்தைய மருத்துவ தலையீடுகளால் உருவாக்கப்பட்ட அபாயங்களை நிர்வகிக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான தொடர்ச்சியான மருத்துவ தலையீடுகளாலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த சுழற்சி வெறுமனே பாதுகாப்பு பற்றியது மட்டும் அல்ல – இது வணிக சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் தொடர்புடையது.

புதிய அபாய வகைப்பாடுகள்,புதிய தயாரிப்புகள், நடைமுறைகள், மற்றும் மருந்துகளுக்கான தேவையை  உருவாக்குகின்றன, இதன் மூலம் பிரசவத்தைச் சுற்றியுள்ள தொழில் தொடர்ந்து வளர உதவுகிறது. இவை உண்மையில் பிரசவத்தை அதிக பாதுகாப்பானதாக மாற்றுகின்றனவா? என்பது முற்றிலும் வேறுபட்ட கேள்வியாகும். இப்போது பலரும் அபாயத்தின்  மீது உள்ள இடைவிட்டாத  கவனம், கர்ப்பிணிகளுக்கு  அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கும் என்பதைக் ஒப்புக்கொள்கிறார்கள். இது ஒருவகையான புதிய அபாயக் காரணியாகவே மாறுகிறது.

——-

நிருபர்: உங்கள் புத்தகத்தின் மீதமுள்ள இரண்டு முக்கியமன அம்சங்கள் ஆதாரப்பூர்வ தகவல்கள் சார்ந்தது மற்றும் விருப்பத்தேர்வு. இவற்றில் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை பற்றி கூடுதலாக கவனம் செலுத்த விரும்புகிறேன். பெண்களின்  ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கான  பொதுவாக சுகாதாரம் குறித்த விவாதங்களில் இது ஒரு மையப் பிரச்சினையாக அடிக்கடி எழுகிறது. தற்கால பிரசவ நடைமுறைகளில் தேர்ந்தெடுக்கும் உரிமை ஏன் முக்கியமானது என்பதையும், உங்கள் புத்தகத்தில் இதை எவ்வாறு அணுகியுள்ளீர்கள் என்பதையும் விளக்க முடியுமா?

அன்னா : பிரசவத்தில் தேர்வு செய்யும் உரிமை மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆனால், தேர்ந்தெடுக்கும் உரிமை  என்பதை விட முடிவெடுக்கும் உரிமை (decision-making) அல்லது சுயநிர்ணயம் என்று  சொல்ல  நான் விரும்புகிறேன்.

1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் தொடக்கத்திலும், என் தாயார் பிரசவ உரிமைகள் குறித்த சமூக செயற்பாட்டாளராக இருந்த போது, “பிரசவத்தில் தேர்வு” என்ற விவாதத்தை முதன்முதலாக சந்தித்தேன். கருக்கலைப்பு சம்பந்தப்பட்ட விவாதங்களில் நாம் அடிக்கடி ‘தேர்வு’ பற்றிப் பேசுகிறோம். அது மிகவும் முக்கியமானது. ஆனால், பிரசவத்தின் போது ஒரு கர்ப்பிணியின்  தேர்வு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.

என்னை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பத்தை தொடர்வதா இல்லையா என முடிவெடுக்கும் உரிமையைக் கூட  நாம் போராடி தான் பெறுகிறோம். ஆனால், அவர் தொடர முடிவு செய்தால் பிரசவ பராமரிப்பு குறித்து தான் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அவருக்கு வழங்க வேண்டும் என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம்.

ஒரு நபர் பிரசவத்தின் போது என்ன நடக்கிறது என்பதை தீர்மானிக்க அனுமதிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு செயல்முறை செய்யப்படுமா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் திறன்  பிரசவத்தின் நலனுக்கு முக்கியமான காரணியாக உள்ளது.இந்த முடிவெடுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும்போது பிரசவ காலத்தில் மனரீதியாக உருவாகும்  பாதிப்பு (birth trauma) எண்ணிக்கைகள் கணிசமாக அதிகரிக்கின்றன.ஆனால், பிரசவ உரிமை செயற்பாட்டாளர்கள் “பிரசவத்தில் தேர்வு”க்காக இயக்கம் நடத்தத் தொடங்கியபோது, அந்த உரையாடல் தனக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்வதற்கான உரிமைக்கான  குரலுடன்  ஒன்றிணைந்துவிட்டது, இது நவதாராளமயத்தின் எழுச்சியை பிரதிபலிக்கிறது.

இதனால் ஒரு தவறான எடுத்துக்காட்டு உருவாகியது. நாம் நமக்கு எப்படி பிரசவம் நடக்க வேண்டும் என  தேர்ந்தெடுக்கலாம் என்பது கடையில் ஒரு குறிப்பிட்ட வகை பண்டத்தை வாங்குவது போல என்ற கருத்து நிலைத்தது.ஆனால், பிரசவம் அப்படி செயல்படுவதில்லை. மக்கள் தங்களுக்கு எவ்வாறு பிரசவம் நடக்க வேண்டும்  என்பதை  தேர்வு செய்து கொள்ள  முடிவது மிக முக்கியமானது. எப்போதும் அதன் முடிவுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல  ஒவ்வொருவருக்கும் விருப்பம் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதும் பெரும்பாலும் கவனிக்கப்படாத உண்மை.

பலருக்கு பிரசவத்தில் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லை அல்லது மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது. யார் தேர்ந்தெடுக்கலாம்? யாருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? யாருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படு?. எது சரியான தேர்வு? எது தவறான தேர்வு? என்பதெல்லாம் முதலாளித்துவமே வடிவமைக்கிறது.

மேலும், “தேர்வு” என்பது சில நேரங்களில் மருத்துவ தலையீடுகளுக்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. “நான் X அல்லது Y தலையீட்டை ஏற்க மறுக்கிறேன்” என்பது போல. ஒரு தலையீட்டிலிருந்து விலகி நிற்பது முக்கியமாக இருக்கலாம். ஆனால் முதலில் ஏன் மக்கள் அந்த தலையீடுகளிலிருந்து விலக வேண்டிய தேவை ஏற்படுகிறது என்று நாம் நம்மைத்தானே கேட்க வேண்டும். இங்கு முக்கியமானது தனிப்பட்ட தேர்வுகளை விட அனைவருக்கும் உயர்தர பராமரிப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகும்.

பிரசவத்தின் போது முடிவெடுப்பது வாழ்க்கையின் பிற நேரங்களை விட கடினமானது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதனால்தான், பிரசவ பணியாளர்கள் மற்றும் பிரசவிக்கும் நபர்கள் (அவர்களின் ஆதரவு நபர்கள் உட்பட) இடையே நம்பிக்கை மற்றும் வலுவான உறவுகள் தேவை. இந்த உறவுகள் பிரசவம் தொடங்குவதற்கு முன்பே வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். இது பிரசவிக்கும் நபர்கள் முடிவெடுப்பதற்குத் உதவியாக இருக்கும்.

——-

நிருபர்: பிரசவ கால பணியாளர்கள் – பல சுகாதாரப் பணியாளர்களைப் போல – கடந்த சில வருடங்களில் செலவுக் குறைப்புகள் போன்ற கொள்கைகளால் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும், பலர் தங்கள் சொந்த பணி நிலைமைகள் மற்றும் நோயாளிகளுக்கான சிறந்த பராமரிப்பிற்காகவும் பிரச்சாரங்களை முன்னின்று நடத்துகின்றனர்.

அன்னா : இன்று பிரசவகால பணியாளர்கள் எவ்வாறு ஒருங்கிணைவதாக பார்க்கிறீர்கள்? மேலும், பிரசவத்தை வியாபார நோக்கோடு செயல்படுத்துவதை எதிர்த்து போராடுவதற்கு மற்றும் மேம்பட்ட மகப்பேறு கால மருத்துவத்திற்கு குரல் கொடுக்க அவர்கள் எவ்வாறு சமூகத்தை ஒருங்கிணைக்கும் வேலையை  செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இதற்கான போராட்டம் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது. தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதே நேரத்தில் போதிய பிரசவ கால பணியாளர்களை பணியில் அமர்த்தாமல் இருக்கிறோம்.இது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது.  வளமான நாடுகளில்கூட பல பகுதிகளில் அடிப்படை மகப்பேறு வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. பேறுகால  மருத்துவ நிபுணர்கள் செவிலியர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது .

எடுத்துக்காட்டாக, நியூசிலாந்தில், நான் கடைசியாக பார்த்தபோது, பேறுகால  மருத்துவப் பணியாளர்கள் (midwives) துறையில் 40% பணி திறன் குறைவிருந்தது. முழுமையாக செயல்படுவதற்கே தேவைப்படும் 40% பேர் இல்லாத நிலை உள்ளது. பணியில் உள்ள பேறுகால மருத்துவர்கள்   மிகுந்த பணிச்சுமையில் வேலை செய்து வருகின்றனர், அவர்கள் தங்களது திறனை விட அதிகமாக நெருக்கடியில் செயல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. பல நாடுகளில் அவர்கள் வேலைநிறுத்தம் செய்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இவ்வாறு   பேறுகால மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது சாதாரணம் அல்ல. ஆனால் அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது அது நிலைமை மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதற்கான அறிகுறியாகும்.மகப்பேறு காலத்தில் குழந்தையும், குடும்பங்களும், மருத்துவப்பணியாளர்களும்  என ஒரே கோட்டில்  இருக்கிறார்கள். இருவர் நலனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சிறப்பான சேவையை பெற அவர்களின் சிறப்பான பணிச்சூழல் மிக அவசியம் அதை உணர்ந்து கைகோர்க்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இது நாம் செய்ய வேண்டிய முதலீடு.

எனக்கு “முதலீடு” (investment) என்ற வார்த்தை மிகவும் பிடிக்காது.  ஏனெனில் அது மூலதனச் சூழ்நிலையின் வார்த்தையாகும். ஆனால் நாம் மூலதனச் சூழலில் வாழ்வதால், அதை முற்றிலும் தவிர்க்க முடியாத நிலைமை உள்ளது.நடைமுறையில், பிரசவ கால பணியாளர்கள் மன அழுத்தம் இல்லாமல் போதுமான ஓய்வுடன் வேலை செய்ய முடியும்படி நிதி மற்றும் வசதிகளை வழங்க வேண்டும்.

இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் பிரசவ  கால பணியாளர்கள் கர்ப்பிணிப் பெண்களுடன் நேரடி உறவில் ஒருவருக்கு ஒருவர் கவனிப்பு வழங்கக்கூடிய சூழல் உருவாக வேண்டும்.மேலும், சமூக அடிப்படையிலான பிரசவப் பணியாளர்களுக்கு இது மிக அவசியம், ஏனெனில் அவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடர் பராமரிப்பை வழங்குகிறார்கள்.

தொடர் பராமரிப்பு என்றால், ஒருவர் அறிமுகமில்லாத மருத்துவ பணியாளர்களால் நிரம்பிய மருத்துவமனையில் இயந்திரமயமான முறையில் பராமரிக்கப்படுவதை விட, தாம் நம்பிக்கையுடன் இருந்த ஒரு பிரசவப் பணியாளரின் உதவியுடன் பிரசவிக்க வேண்டும் என்பதே.செவிலியர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இடையேயான உறவு உருவாக்கும் செயல்பாடு உண்மையாகவே உதவுகிறது. ஒருவர் தன் பிரசவத்தில் இருப்பவரை முன்பே அறிந்திருந்தால், அவரை நம்பிக்கையுடன் இருக்க முடிந்தால், அது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் பிரசவ அனுபவம் ஒரு இயந்திரமயமான செயல்பாடாக உணரப்படுவதில்லை. அவ்வாறாக நம்பிக்கையான தொடர்பே இல்லாமல் இருப்பதை “குழந்தையை பெற்றுப்போடும்  தொழிற்சாலை”  போன்றே உள்ளது எனக் குறிப்பிடுகிறார்கள்.

பிரசவிக்கும் கர்ப்பிணியும்  அவருக்கு உதவிக்செய்கின்ற  பிரசவ காலப்  பணியாளருக்கும் இடையே நம்பிக்கையான உறவு இருந்தால், மக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.உடலியல் செயல்முறைகளும் சிறப்பாக வேலை செய்கின்றன. இதற்கான உடலியல் காரணங்களை நான் விரிவாக விவரிக்கப் போவதில்லை. ஆனால் அவை மிக  ஈர்ப்புடையவை.இப்படியான பராமரிப்பு முறைகளை நாம் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை மேலும் விரிவாக்கவும் வேண்டும். அதற்காக,  பேறுகால மருத்துவப் பணியாளர்கள் தாங்க முடியாத அளவிலான வேலைச் சுமையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அவர்களின் வேலைச்சுமை நீடித்த காலத்திற்கு நிரந்தரமாக இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும், அதுவே மிக அவசியம்.

மேலும், மகப்பேறு மற்றும் கருவுறுதல் சிகிச்சை சேவைகளை தனியார்மயமாக்குவதை எதிர்ப்பது அவசியம்.இதற்கும், கருக்கலைப்பு சேவையை அணுகுவதற்கும், பாதுகாப்பான கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவத்துற்கு பிறகான பராமரிப்பிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. இந்த பிரச்சினைகளை தனித்தனியாக பார்க்க முடியாது.கருக்கலைப்பு கட்டுப்படுத்தப்படும் போது, தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. இதன் மூலம், இவை தனித்தனி பிரச்சினைகள் அல்ல, ஒருவருக்கொன்று ஆழமாக தொடர்புடையவை என்பதும் வெளிப்படையாகிறது.

இந்த தொடர்புகளை உணர்வதும், சரியாக அணுகுவதும், கர்ப்பம் தரிக்கின்ற மக்களையும் எதிர்கால சந்ததியையும் ஆதரிக்கும் ஒரு ஆரோக்கியமான மருத்துவ அமைப்பை உருவாக்குவது அடிப்படைத் தேவையாகும்.வெவ்வேறு போராட்டங்களை இணைப்பது மிக அவசியம்.  பாதுகாப்பான பிரசவ பராமரிப்புக்கான இயக்கங்கள், பாதுகாப்பான கருக்கலைப்பு சேவையை அணுகுவதற்கான போராட்டங்கள், மகப்பேறு முறைகேடுகளை (obstetric violence) எதிர்ப்பதற்கான முயற்சிகள், மேலும், மூலதனச் சூழ்நிலையை எதிர்க்கும் விரிவான செயல்பாடுகளின் மத்தியில் இணைப்பு உருவாக்க வேண்டும். இந்த போராட்டங்கள் முதலில் வேறுபட்டவையாக தோன்றலாம், அல்லது ஒருவருக்கொன்று தொடர்பில்லாதவை போல காணப்படலாம். உண்மையில், இவை அனைத்தும் நம் சமூக அமைப்புகளில் ஒன்றோடன்று பிணைக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் பூர்ணா  

இந்த  நேர்காணல் முதலில் People’s  Dispatch இணையதில் வெளியானது.

Leave a Reply